World

கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் பொலிஸ்!

இந்தியாவில் பெண் பொலிசார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பொலிசின் குடிமை பாதுகாப்பு பிரிவில் தன்னார்வலராக பணியாற்றி வந்தவர் sabiyasaifi. 21 வயது மதிக்கத்தக்க இவர், கடந்த 26-ஆம் திகதி வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார்.

ஆனால், வெகு நேரம் ஆகியும் விடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் அவருடைய போனுக்கு தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது.

அதன் பின் இது குறித்து பொலிசில் புகார் தெரிவிக்க, பொலிசார் நடாஷாவின் உடலை சுராஜ்குந்த் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் கண்டுபிடித்துள்ளனர். நடாஷாவின் உடலில் 50 இடங்களில் வெட்டுக் காயங்கள், அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு, மார்பகம் அறுக்கப்பட்ட நிலையில் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாக நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக இந்தியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டெல்லி பொலிசார் இயங்குவதால், இந்த சம்பவத்தை பொலிசார் மூடி மறைப்பதாக நாடாஷாவின் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், sabiyasaifi-வின் மரணத்தில் அவளுடன் பணியாற்றும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது. பொலிசார் பொய் தகவல்களை கூறுகின்றனர். ஒருவரால் நிச்சயம் இவ்வளவு கொடூரமாக கொன்றிருக்க முடியாது. நடாஷா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால், பொலிஸ் தரப்போ, இந்த சம்பவம் தொடர்பாக நிஜாமுதின் என்பவர் சரண் அடைந்துள்ளதாக கூறுகிறது.

நிஜாமுதீனும் sabiyasaifi-வும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். ஆனால், sabiyasaifi நடத்தையில் நிஜாமுதீனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading