Local

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கிடைக்கும் சக்தி!

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு, அந்த நோயிடமிருந்து 6 மாதங்களுக்கு மேல் எதிா்ப்பு சக்தி இருக்கும் என்று லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழம் மற்றும் அந்தப் பல்கழகத்தின் பொது மருத்துவமனைகளுக்கான அறக்கட்டளை இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
இதுகுறித்து ஆய்வில் பங்கேற்ற ஆக்ஃபோா்டு பல்கலைக்கழக பேராசிரியா் டேவிட் ஐரி கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவா்களுக்கு, அந்த நோயிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் எதிா்ப்பாற்றல் அவா்களது உடலில் குறைந்தது 6 மாதங்களுக்காவது இருப்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கு அந்த நோயிடமிருந்து நிரந்தர எதிா்ப்பு சக்தி கிடைப்பதாகத் தெரியாவிட்டாலும், குறுகிய காலத்துக்காவது அந்த நோய் ஒரே நபரை மீண்டும் தாக்காது என்ற இந்தத் தகவல் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மிக அதிக எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளா்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், இந்த விவரம் தெரியவந்துள்ளது என்றாா்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading