Local

கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் விசர்நாய் புகுந்ததால் பரபரப்பு மூவர் காயம்!

கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் திடீரென நுழைந்த விசர் நாயொன்று அங்கு சிகிச்சைப்பெற்றவர்களில் மூன்று பெண்களை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று மொறவக்க, கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப்பிரிவில் வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பெண்கள் உட்பட 38 பேர் சம்பவத்தின்போது இருந்துள்ளனர்.

விசர் நாய் திடீரென உள்ளே புகுந்து, கடிக்க ஆரம்பித்த பின்னர் சிகிச்சை நிலையத்துக்குள் இருந்தவர்கள் கட்டில்மீது ஏறியுள்ளனர். அத்துடன், கூச்சலிட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடும் சிரமத்துக்கு மத்தியில் வைத்தியசாலை ஊழியர்களை நாயை விரட்டியடித்துள்ளனர். எனினும், வெளியே இருந்த சிலரால் நாய் அடித்துக்கொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading