Local

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டாம் – நிதி அமைச்சு!

இலாபமடையாத, நட்டத்தில் அரச நிறுவனங்களில் பணியாற்றும், ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளக்கூடாதென, நிதி அமைச்சு அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ,மின்சார சபையின் கடன்கள், ஆயிரம் பில்லியனைத் தாண்டியுள்ளது. நட்டத்தில் இயங்கிவரும் இந்நிறுவனத்தை இலாபமடையச் செய்ய எந்தவிதமானத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதி அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ,நட்டத்தில் இயங்கிவரும் மின்சார சபை, நீர் வழங்கல் அதிகார சபை ஆகியன தொடர்பில் நிதி அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading