சிக்கப்போகும் மைத்திரி – கோட்டாபய?
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் கடத்த சம்பவமொன்று தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவும் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு பின்னர், மக்களின் நிலைப்பாடுகள் மற்றும் பொதுத் தளங்களில் பரப்பப்படும் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானித்துள்ளது.
இதன்மூலம், சட்டரீதியான கைதுகள் இடம்பெறும் போது பொதுமக்கள் அதற்கு இடம் கொடுக்கின்றார்கள் என்ற விடயம் புலனாய்வுத் தகவலாக அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.
அதனால், இனிவரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதிகள் கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.