ஜீவனின் திருமண நிகழ்வில் ரணில்…!!!
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (21) இந்தியா செல்லவுள்ளார்.
ஐ.தே.கவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெணான்டோ இந்த தகவலை வெளியிட்டார்.
எனவே, நுகேகொடை கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பது சாத்தியமில்லை எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் இலங்கையிலுள்ள மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளனர்

You must be logged in to post a comment.