டிரம்ப் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்படலாம் என எச்சரிக்கை!!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரது வீட்டில் சூரியக் குளியலில் ஈடுபடும் போது, ட்ரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படலாம் என
ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராக, ஈரான் தலைவர்கள் வெளிப்படையான மிரட்டல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்துப் பேசிய விடயம், தற்போது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி, சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

You must be logged in to post a comment.