Local

டெனிம் கால்சட்டை திருடியவருக்கு 6 ஆண்டுகளுக்குப் பின் ஒரு வருட கடூழிய சிறை!

குருந்துவத்த பிரதேசத்தில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் சுமார் இருபதாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு டெனிம் கால்சட்டைகளை திருடிய இளைஞருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் 2017 ஜனவரியில் நடந்துள்ளது .

சம்பவம் நடந்த நாட்களில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் , பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

முதலில், நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது, மேலும் வழக்கு ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. அதன்படி நேற்று தீர்ப்பை அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், சந்தேகநபருக்கு ஒரு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading