தியத்தலாவையில் கோர விபத்து – ஐவர் பலி
தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
