Entertainment

திருவிழாவிற்கு பெண் வேடமிட்டு வந்த ஆண்கள்!

கேரள சுற்றுலாத் துறை வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, கோட்டம்குளகரா சமயவிளக்கு திருவிழா – விளக்குகளின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இது மலையாள மாதமான மீனத்தின் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மார்ச் இரண்டாம் பாதியில் கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில், ஆண்கள் பெண் வேடமிட்டு கைகளில் விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலம் நடத்துவார்கள். இந்த் திருவிழாவில் கேரளா முழுவதிலும் இருந்து ஆண்கள் புடவை உடுத்தி, நகைகள் மற்றும் ஒப்பனை அணிந்து இந்த தனித்துவமான சடங்கில் பங்கேற்கின்றனர். பெண் வேடமிட்ட ஆண்கள் தெய்வீகமான சமயவிளக்கை ஏந்திக்கொண்டு கோயிலைச் சுற்றி வல வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள் என்று கேரள சுற்றுலாத் துறை இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த திருவிழா கேரளாவில் திருநங்கைகளின் மிகப்பெரிய கூட்டமாக மாறியுள்ளது. ஏனெனில், இது அவர்களின் அடையாளத்தை கொண்டாட ஒரு இடத்தை வழங்குகிறது. (இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading