திரைப்படமாகிறது சில்க் ஸ்மிதா வாழ்க்கை!

இந்நிலையில் கணக்கிடலங்காத திருப்பங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அவள் அப்படித்தான் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளனர்.
இதன்படி சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. வறுமையின் கோரப்பிடில் இருந்த குடும்பத்தில் பிறந்த சாதாரண பெண். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் சிறந்த நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்தே
வறுமையால் தவித்த சில்க் ஸ்மிதாவின் குடும்பம் அவருக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. கணவன் வீட்டிலும் மாமியார் தொல்லையால் அவதிப்பட்ட சில்க் ஸ்மிதா, சினிமா தான் சரியான பாதை என நினைத்து சென்னை வந்துள்ளார்.
பட்டு போன்ற உடலுக்கு சொந்தக்காரி என்பதால் சில்க் ஸ்மிதா என பெயர் வந்ததாக பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வினுசக்ரவர்த்தி அறிமுகப்படுத்திய முதல் படத்தில் சிலுக்கு என்ற பெயரில் நடித்தார். அன்றிலிருந்து அது அவருடைய பட்டப்பெயராக மாறியது
தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.திரையுலகில் அடியெடுத்து வைத்து 4 ஆண்டுகளிலேயே சில்க் ஸ்மிதா 200 படங்களில் நடித்திருந்தார்.
புகழின் உச்சத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். இன்று வரை அவருடைய மரணத்திற்கான காரணம் மர்மமாகவே உள்ளது
இந்நிலையில் கணக்கிடலங்காத திருப்பங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அவள் அப்படித்தான் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளனர்.
காயத்ரி பிலிஸ், முரளி சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குநர் மணிகண்டன் இயக்க உள்ளார். சில்க் ஸ்மிதா போலவே வசீகர கண்களை கொண்ட பெண்ணை தான் ஹீரோயினாக நடிக்க வைப்பேன் என தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறாராம்.
