Uncategorized

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கியின் மகாத்யா மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கியில் கடந்த இரண்டு நாட்களில், ரிக்டர் அளவுகோலில் 5ஐத் தாண்டிய மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 6ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading