தேவாலயத்தில் ஒரு பாலின திருமணம்! கத்தோலிக்கர்கள் மத்தியில் பரபரப்பு!!
இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில் ஒரு பாலினத் திருமணம் நடைபெற்றதாக மல்கம் ரஞ்சித் வெளிப்படுத்திய தகவல், கத்தோலிக்க சமூகம் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் உரையாற்றிய அவர், இரண்டு இலங்கை பெண்கள் திருமணம் நடத்தும் அருட்தந்தையை ஏமாற்றி தேவாலயத்தில் திருமணம் நடந்ததாக கூறினார்.
அதில் ஒருவரின் தோற்றம் ஹார்மோன் மாத்திரைகள் காரணமாக மாற்றப்பட்டதால் அருட்தந்தை தவறாக வழிநடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
ஒரே பாலினத் திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கர்தினால், இவ்வாறான உறவுகள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த கருத்துகள் கத்தோலிக்க சமூகத்தில் மட்டுமின்றி, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment.