Cinema

நடிகர் ரஜினிகாந்தின் வீடு யாருக்கு வெடித்தது சண்டை!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். 70 வயதிலும் நடிகர்களில் அதிகமாக வாங்கும் சம்பளம் மட்டுமே 100 கோடி.

இதையடுத்து, ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரை பற்றியும் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை.

என்னதான், ஐஸ்வர்யா அப்பாவை தாங்கு தாங்கு என்று தாங்கினாலும், ரஜினிக்கு அவரது இளைய மகளை தான் மிகவும் பிடிக்கும்,.

இந்த நிலையில், ரஜினியின் 150கோடி ரூபாய் வீடு யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளதாம். ரஜினி மற்றும் லதா இருவருக்குமே அந்த வீட்டை இளைய மகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம்.

ஆனால், தனுஷ் தற்போது ஹாலிவுட் சினிமா வரை பிரபலமான நடிகராக இருப்பதால் ரஜினியின் வீடு கிடைத்தால் இன்னும் அவரது மாஸ் கூடுமென ஐஸ்வர்யா அவரது வீட்டுக்கு அடி போட்டுள்ளார்.

மேலும், இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடிக்க ரஜினியோ இளைய மகளுக்கு தான் இன்று நான் தங்கியிருக்கும் வீடு என ஓபன் ஆக சொல்லிவிட்டாராம்.

இதனால் அதிருப்தி அடைந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்துவதற்காக தற்போது தன்னுடைய வீட்டின் அருகில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு வீட்டை கட்டி வருகிறாராம்.

என்னதான் இருந்தாலும் அப்பாவின் வீடு தனக்கு இல்லையே என்ற ஆதங்கம் ஐஸ்வர்யாவுக்கு அதிக அளவில் உள்ளதாம்.
அதேப்போல், தனுஷுக்கும் அந்த வீட்டின் மீது ஒரு கண் இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் அது தற்போது கிடைக்கவில்லை என்ற மன வருத்தம் இருவருக்குமே இருக்கிறதாம். இந்த தகவல்கள் ரஜினியின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளன. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading