Local

நிதியமைச்சர் பதவியை கோருகின்றார் பசில், வழங்க பிரதமர் மறுப்பு!

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சர் பதவியை பெறவுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல் வெடித்துள்ளது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

பசில் நிதியமைச்சை கோரியுள்ளார் எனினும் பிரதமர் அதனை ஏற்க மறுத்துள்ளார் என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரும் அவரது குடும்பத்தினரும் நிதியமைச்சை பசிலுக்கு வழங்குவதற்கு மறுத்துள்ளனர் என அரசியல்வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

எட்டாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள பசில்ராஜபக்சவிற்கு ஜனாதிபதி உடனடியாக அமைச்சர் பதவியை வழங்கவுள்ளார்.

ஆனால் பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை அல்லது அதற்கு சமமான பதவியை கோரியுள்ளார், இதன் காரணமாக அவருக்கு என்ன அமைச்சினை வழங்குவது என முடிவாகவில்லை .

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன – விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

பசில்ராஜபக்சவிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியை வழங்குவது குறித்து ஆராயப்படுகின்றது, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading