பச்சை குத்தினால் புற்றுநோய் வருமா?
பச்சை குத்துதல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பச்சை குத்துதல் (tattooing) மற்றும் புற்றுநோய் ஆபத்து (cancer risk) ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

டென்மார்க் தெற்கு பல்கலைக்கழகம் மற்றும் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் (University of South Denmark and the University of Helsinki) விஞ்ஞானிகள் பச்சை குத்தும் மை தோலின் அடியில் மட்டும் இல்லாமல், நிணநீர் கணுக்களில் (lymph nodes) சேகரமாகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
நிணநீர் கணுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கியமான பகுதியாகும். அவை தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டும் பணியை செய்கின்றன.
பச்சை குத்தும் மை நிணநீர் கணுக்களில் சேகரமாகும் போது, நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த தொடர்ச்சியான வீக்கம், காலப்போக்கில் அசாதாரண செல் வளர்ச்சிக்கு வழிவகுத்து, தோல் புற்றுநோய் (skin cancer) மற்றும் லிம்போமா (lymphoma) போன்ற புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பச்சை குத்துதல் பிரபலமடைந்து வரும் நிலையில், இந்த ஆராய்ச்சி முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
2022 ஆம் ஆண்டு YouGov நடத்திய ஆய்வில், பிரித்தானிய மக்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் (26%) பச்சை குத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.