Local

பட்டினியால் 1400 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவின் வடக்கு டைக்ரே பகுதியில் பட்டினியால் 1,400 பேர் எத்தியோப்பியாவின்உயிரிழந்துள்ளனர்.

உணவுப் பொருட்கள் திருடப்பட்டதால், உதவி நிறுவனங்கள் உணவு வழங்குவதை நிறுத்தியதே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமாகும்.

திருடப்பட்ட உணவு பொருட்கள் சந்தைகளில் உதவி நிறுவனங்களின் சின்னங்களுடன் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய உணவு நிறுவனமான ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு உணவு உதவியை நிறுத்தியது.

இதனால் இந்த எண்ணிக்கையில் பலி எண்ணிக்கை பதிவாகி விசாரணையில் இந்த உணவு திருட்டில் கிட்டத்தட்ட 500 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும், உணவு உதவி தவறாகப் பயன்படுத்தப்பட்டதா அல்லது பணமில்லா உதவி பெறுபவர்கள் சந்தை உரிமையாளர்களுக்கு விற்றதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

நிறுத்தப்பட்ட உணவு உதவி விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று உலக உணவு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading