Local

பத்மே வெளியிட்ட அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவல்கள்!

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி இரசாயனத்தைப் பயன்படுத்தி தானும் தனது குழுவினரும் சமீபத்தில் பதின்மூன்று கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாக பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மே தெரிவித்துள்ளார்.

பத்மேவை தடுப்புக் காவலில் வைத்து நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு இரண்டு ஈரானிய நிபுணர்களின் ஆதரவு பெறப்பட்டுள்ளதாகவும் கெஹல்பத்தர பத்மே தெரிவித்துள்ளார்.

இலாபகரமான முறை

அத்துடன், ஐஸ் போதைப்பொருளை நேரடியாக இறக்குமதி செய்வதை விட, அந்த இரசாயனங்களைப் பயன்படுத்தி அதனை தயாரிப்பது மிகவும் இலாபகரமானது என்பதால் அவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

பத்மே வெளியிட்ட அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவல்கள்! தொடரும் விசாரணைகள் | Kehelbaddara Padme Police Investigation News

பாதுகாப்புப் படையினருக்கு எந்த சந்தேகமும் ஏற்படாதவாறு வேறு தயாரிப்புப் பொருட்களின் வடிவத்தில் இந்த இரசாயனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading