Cinema

பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்!

மலையாள திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கிய கே.பி.பிள்ளை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

21 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற அவர், அதன்பிறகு 1968-ம் ஆண்டில் மலையாள நாடகங்களை நடத்தினார். பின்பு 1970-ம் ஆண்டு சினிமா துறையில் கால்பதித்தார்.

முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், 1974-ம் ஆண்டில் “நகரம் சாகரம்” என்ற படத்தை இயக்கினார்.

அதன்பிறகு “பாதிரா சூரியன்”, “பிரியசகி”, “பணிதீராத வீடு” உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்துவந்த அவர், நேற்று மரணமடைந்துள்ளார். இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.    

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading