Local

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்; சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 900 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

பிறந்தது முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குழந்தை புற்றுநோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது.

அந்தவகையில், புதிதாக 471 ஆண் பிள்ளைகளும் 454 பெண் பிள்ளைகளும் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குழந்தை புற்று நோயாளர்கள் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading