World

பெட்ரோல் விலை அதிகரிப்பு!

பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன.

கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பாகிஸ்தானிடம் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

இதனால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்க ளின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.77 அதிகரித்து ரூ.286.77-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186.07-க்கு விற்கிறது.

அதே வேளையில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. டீசல் லிட்டர் ரூ.293-க்கும், லைட் டீசல் ரூ.174.68-க்கும் விற்பனை ஆகிறது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. பாகிஸ்தானில் பண வீக்கம் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த மாதம் பணவீக்கம் 35 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading