Cinema

பொன்னியின் செல்வன் வெற்றி கொண்டாட்டத்தில் அடிதடி?

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் அடிதடி ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, நந்தினி, விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஷோபிதா, விக்ரம் என திரையுலகில் உள்ள பிரபலங்களின் சங்கமமாக களமிறங்கி நடித்து, வெளியாகிய படம் தான் பொன்னியின் செல்வன்.

இப்படத்தினை அவதானித்த பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டாவது பாகம் எப்போது என்ற கேள்வியை மனதில் கொண்டு வரும் அளவிற்கு குறித்த படம் பயங்கர வெற்றி பெற்றுள்ளது.

தற்போது இப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் திரையரங்களில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த வாரம் நடைபெற்றதாம்.

பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டியில் ஏற்பட்ட அடிதடி! முகம்சுழித்த பிரபலங்கள் | Ponniyin Selvan Success Party Fight End

அடிதடியில் முடிந்த கொண்டாட்டம்

இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில், முடியும் தருவாயில் அடிதடி ஏற்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இயக்குனர் மணிரத்னத்தின் பெண் உதவி இயக்குனர் ஒருவரிடம் லைகா நிறுவன நபர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் அங்கிருந்தவர்கள் அவரை அடித்து வெளியே அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவத்தினால் குறித்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிரபலங்களுக்கு சற்று சங்கடம் ஏற்பட்டதாகவும், முகம் சுழிக்கும் அளவிற்கு பிரச்சினை இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading