Local

பொருளாதார நெருக்கடியால் விபச்சாரத்தில் ஈடுபடும் இலங்கைப் பெண்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கற்பனை செய்ய முடியாத குடும்பங்களைச் சேர்ந்த யுவதிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒருபுறம் போதைப்பொருள் கடத்தல் தீவிரமாகப் பரவி வருகிறது. ஆட்கடத்தலை ஒடுக்க அரசு வலுவான திட்டத்தை செயல்படுத்துவதாக தெரியவில்லை. 

மேலும், கற்பனை செய்ய முடியாத குடும்பத்தைச் சேர்ந்த யுவதிகள் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் எங்களிடம் கூறுகின்றனர். 

எங்கே போகிறது இந்த நாடு? ஒரு பக்கம் சிங்கள பௌத்த நாடு. மறுபுறம் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் நாடு. இப்படிச் சென்றால் உணவு பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சிலரே எஞ்சியிருப்பார்கள், மீதமுள்ளவர்கள் இறந்துவிடுவார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading