Local

பொலிவுட் நடிகர் சாருக்கான் இலங்கையில்…?

பொலிவுட் நடிகர் ஷாருக் கான் இந்த ஆண்டு கொழும்பில் பிரமாண்ட நிகழ்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிகழ்வு குறித்த விபரங்களை ஏற்பாட்டாளர்கள் இன்னும் வெளியிடவில்லை.

சமூக ஊடகப் பதிவுகள் ஏற்கனவே கொழும்பில் அவர் நிகழ்ச்சி நடத்துவதைக் குறிக்கும் விளம்பர பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதோடு ஒகஸ்ட் 2ஆம் திகதி குறித்த நிகழ்வு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு

2025, ஒகஸ்ட் 2 இல் இலங்கையில் நடத்தப்படும், சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்(City of Dreams) என்ற விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவிலேயே பொலிவுட் நடிகர் சாருக்கான் கலந்து கொள்ளவுள்ளார்.

முன்னதாக சாருக்கான் 2004 ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ச்சி நடத்தினார்.

பொலிவுட் நடிகர் சாருக்கான் இலங்கையில் நடத்தவுள்ள பிரமாண்ட நிகழ்வு.. | Bollywood Actor Sarukhan S Grand Event In Colombo

சாருக்கான் இசை நிகழ்ச்சியை முடித்த அதே நேரத்தில் அரங்குகளில் குண்டுவெடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading