மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிகரிக்கும் வெப்பம்!
மேல், சப்ரகமுவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் ‘அவதானிப்பு செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது செயற்பாடுகளில் ஈடுபடுவதோ சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிகப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் என்பதால், போதியளவு தண்ணீர் பருகுமாறும், வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான இலகுவான ஆடைகளை அணிந்து நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.