மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை!

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அனுராதபுர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ,மக்களுடைய தேவையை நிறைவேற்றுவதற்கான மிளகாயை நாட்டினுள் உற்பத்தி செய்ய விஷேட வேலைத்திட்டம் ஒன்றை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
