Uncategorized

முன்னாள் ஜனாதிபதியின் தவறான தீர்மானத்தால் நாடு இக்கட்டான நிலைக்கு சென்றதாக ருவன் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான ஆலோசனையினால் நாடு அராஜகமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தேயில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர், பொருளாதார நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சி காரணம் அல்ல.

விரைவில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற முடியும் எனவும் அதன் பின்னர் பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கக் காத்திருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading