முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமாம் பாதுகாப்பு வழங்க ஞானசார தேரர் கோரிக்கை!

முஸ்லிம் சமூகத்தின் மீது வஹாப்வாதிகள் தாக்குதல்களை நடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதால் இம்மாதம் முழுவதும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Gnanasara Tero), பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம் மக்களைப் பாதுகாக்குமாறு கோரி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம் சமூகம், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை இம்மாதத்தில் கொண்டாடும் நிலையில் அதனை வஹாப்வாதி குழுக்கள் பல்வேறு வகையில் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பது குறித்து தொடர்ச்சியாக அவதானிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
