World

யாரும் பசியுடன் உறங்க கூடாது துபாயின் Bread for All திட்டம் அறிமுகம்..!!

டுபாயின் மனிதாபிமானச் செயல் – யாருமே பசியுடன் உறங்கக் கூடாது! – Bread For All திட்டம் அறிமுகம்

டுபாயின் பசிப்பிணியைப் போக்கும் Bread for All திட்டத்தை, அந்நாட்டின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தொடங்கி வைத்துள்ளார்.

டுபாயில் எவரும் பசியுடன் உறங்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், இந்த உன்னதமானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகரம் முழுவதும் நவீனமான, தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எந்நேரமும், அதாவது 24/7, புதிய ரொட்டிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

எந்தவிதமான விண்ணப்பங்களோ அல்லது காத்திருப்புகளோ தேவையில்லை. யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமும் இல்லை.

தொழில்நுட்பத்தையும் கருணையையும் இணைத்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அக்கறையுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதே துபாயின் தொலைநோக்கு பார்வையாகும்.

எந்தவிதமான தயக்கமும் இன்றி, பசியால் வாடும் எவரும் இந்த வசதியைப் பயன்படுத்திப் பயன்பெறலாம் என்பது இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading