Local

ராஜபக்ச அரசுக்கு எதிராக தாயும் மகளும் தனித்து போராட்டம்!

இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

தலைநகர் கொழும்பு மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளில் #GoHomeGota போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் களுத்துறையில் நடந்த போராட்டம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

களுத்துறை பாலத்தில் தாயும் மகளும் மட்டும் போராட்டத்தை முன்னெடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கூட்டம் இல்லாத போதும் குறித்த இருவரும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக பிரதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading