Local

ரிஷாத் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV அறிக்கை வெளியானது!

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிலையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சீ.சீ.ரீ.வி கெமராக்கள் எவற்றிலும், ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று குறித்த கெமராக்களை பரிசோதித்துள்ள போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியதகியுள்ளன.

இதன்போது, ரிஷாட் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சீ.சீ.ரீ.வி கெமராக்களில் இரண்டு கெமராக்கள் செயலிழந்திருந்ததாகவும், அதற்கான காரணம் என்னவென்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இதுவரையில் பொலிஸாரினால் 40க்கும் அதிகமான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading