வாழ்த்துக்களுடன் ஆரம்பமான ரணில் – சஜித்தின் கலந்துரையாடல்!
புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாசவும் தனது அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த வாழ்த்துப் பரிமாற்றமானது புத்தாண்டில் ஒரு புதிய அரசியல் ஆரம்பமாக அமையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

You must be logged in to post a comment.