World

விமானி எடுத்த செல்ஃபியால் நடுவானில் மோதிக்கொண்ட போர் விமானங்கள்

விமானி எடுத்த செல்ஃபியே, நடுவானில் விமானங்கள் மோதிக்கொண்டதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

நடுவானில் மோதிக்கொண்ட போர் விமானங்கள்

தென்கொரியாவில், 2021 ஆம் ஆண்டில் இரு போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டது தொடர்பான தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது.

நடுவானில் மோதிக்கொண்ட போர் விமானங்கள் - விமானி எடுத்த செல்ஃபியால் விபத்து | South Korean Pilot Mid Air Selfies Leads Jet Crash

இதில், விமானி நடுவானில் விமானத்தை இயக்கம் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

அடையாளம் வெளியிடப்படாத அந்த விமானி, தனது பணி மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு, தனது கடைசிப் பயணத்தின் காட்சிகளைப் பதிவு செய்ய விரும்பி இவ்வாறு செய்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

செல்ஃபி காரணம்

தென்கொரியாவின் மத்திய நகரமான டேகுவில் மணிக்கு 578 கிலோமீட்டர் (359 மைல்) வேகத்தில் பறப்பில் ஈடுபட்டிருந்த போது தனது தனிப்பட்ட செல்போனை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்க தொடங்கியுள்ளார்.

மேலும், முன்னால் பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் விமானியிடம் தன்னை வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார். அவர் வீடியோ எடுக்கும் போது, விமானத்தை உயரப்பறக்கவிட்டு தலைகீழாக திருப்பியுள்ளார்.

அப்போது அருகருகே வந்த 2 F-15K ஜெட் விமானங்களும் மோதிக்கொண்டதில், முன்னால் சென்ற விமானத்தின் இடது இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால் நிலைப்படுத்தியும் சேதமடைந்தன.

இதில், விமானிகளுக்கு காயம் ஏற்படாவிட்டாலும், இதனால் விமானத்தில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய 880 மில்லியன் வோன்(இந்திய மதிப்பில் ரூ.5.58 கோடி) சேதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அதில், 10 % 88 மில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.5.58 கோடி) விமானிக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.

தற்போது ஒரு வர்த்தக விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்த விங்மேன் விமானியை தென் கொரிய விமானப்படை இடைநீக்கம் செய்தது.

2010 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்ததிலிருந்து, அந்த நபர் நீண்ட காலமாக ஒரு போர் விமானியாகப் பணியாற்றி, விமானங்களைப் பாதுகாப்பாக நிர்வகித்து வருகிறார் என அறிக்கை தெரிவித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading