13 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம்
சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக உலகளாவிய ஆய்வு எச்சரிக்கிறது. மன நலனை பாதுகாக்க தாமதமாக ஸ்மார்ட்போன் கொடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளிடையே மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தற்கொலை எண்ணங்களை அதிகரிக்கலாம் என்று புதிய உலகளாவிய ஆய்வு எச்சரிக்கிறது.
குறிப்பாக 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு, குழந்தைகளின் நல்வாழ்வில் ஸ்மார்ட்போன்களின் தாக்கம் குறித்து பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரிடையே ஒரு முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

You must be logged in to post a comment.