E-Passport வழங்கும் முறையை செயல்படுத்த தயார்!
E-Passport அல்லது மின்னணு கடவுச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
அதன்படி, இ-பாஸ்போர்ட் வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

You must be logged in to post a comment.