World

F-35A போர் விமானங்கள்.. பிரித்தானியா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35A போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

இந்த விமானங்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தக்கூடியவை.

இருப்பினும், சில நேரங்களில், அமெரிக்க B61 அணு குண்டுகளையும் ஏற்றும் திறன் கொண்டவை.

இதன் மூலம், பிரித்தானியா தனது அணு பாதுகாப்பு நிலைப்பாட்டை பலப்படுத்தும் மிகப்பாரிய முயற்சியில் இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் F-35A போர் விமானங்கள்.. பிரித்தானியா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! | Uk To Buy Nuclear Armed Us F 35A Fighter Jets

F-35A வகை விமானங்கள், தற்போது பிரித்தானியாவில் பயன்படுத்தப்படும் F-35Bஐ விட தொலைதூரம் பறக்கும் திறன் மற்றும் மேம்பட்ட ஆயுத ஏற்றும் வசதிகள் கொண்டவை.

F-35B விமானங்கள் கடற்படையின் கப்பல்களில் பறக்கக்கூடியவையாக இருந்தாலும், புதிய F-35A வகை விமானங்கள் இறக்குமதி பாதையிலேயே பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் F-35A போர் விமானங்கள்.. பிரித்தானியா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! | Uk To Buy Nuclear Armed Us F 35A Fighter Jets

எனவே, குறித்த விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்யும் பிரித்தானியாவின் இந்த முடிவு பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், NATO கூட்டமைப்பின் அணுசக்தி ஒத்துழைப்பு திட்டத்திலும் முக்கிய இடம் பிடிக்கிறது.

RAF Marham, Norfolk பகுதியில்தான் இந்த புதிய போர் விமானங்களின் தளம் அமையும். பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முக்கிய முடிவின் மூலம், 20,000 வேலை வாய்ப்புகள் மற்றும் 100 நிறுவனங்களுக்கு மேலாக வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading