Local

ரணில் அரசுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் அமரவீரவின் இல்லத்தில் சு.க. எம்.பிக்கள் ஆலோசனை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக இன்று பகல் ஆலோசனையில் ஈடுபட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவின் கொழும்பிலுள்ள இல்லத்திலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்து செயற்படுவது குறித்தே இவர்கள் ஆலோசனைகளை நடத்தினர் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading