LocalNorth

அரசியல் கைதிகளுக்காக யாழில் இன்று கவனயீர்ப்பு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதமாக்க வலியுறுத்தி, பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு யாழ். பஸ் நிலையம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அனுரதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
அவர்களின் கோரிக்கை அரசால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையால் மருத்துவ உதவிகளையும் அவர்கள் தற்போது நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் கைதிகளின் போராட்ட நியாயத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் கைதிகளின் போராட்டத்துக்குப் பலம் சேர்த்து அவர்களது விடுதலையை விரைவாக்க வலியுறுத்தியும் இன்று இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading