LocalNorth

தீபாவளியன்று கிளிநொச்சியில் கொடூர விபத்து! இரு இளைஞர்கள் பரிதாபப் பலி!!

கிளிநொச்சி ஏ – 9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

தென்னிலங்கையிலிருந்து யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.

விபத்தின்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றவர் கிளிநொச்சி வைத்தியசாலைக் கொண்டு சென்றபோது இறந்துள்ளார்.

இந்த விபத்தில் இறந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீபன் (வயது 18) என்பவரே அடையாளம் காணப்பட்டுள்ளார். பலியான மற்றைய இளைஞர் அடையாளம் காணப்படவில்லை.

தீபாவளித் தினமான நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading