அமெரிக்கா ஈரான் போர் மீண்டும் தொடங்கும் அபாயம்!!
அமெரிக்காவுடனான தற்காலிக போர்நிறுத்தம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நேரடி மோதல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஈரானிய மூத்த ராணுவ அதிகாரி இன்று சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் புதிய சமாதானத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ள நிலையில், பிராந்தியத்தில் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தும் அணுகுமுறை மாறாத வரை அமைதி சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ள ஈரான், தனது ராணுவம் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள முழு தயார் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஏற்கனவே ஸ்தம்பித்துள்ள சர்வதேசச் சூழலில், இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment.