Local

அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் நாளை

இந்த ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் கன்னி வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது.

இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்திற்கான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்கள் குழுவும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading