வெப்பமான காலநிலை தொடர்பான விசேட அறிவிப்பு
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை மேலும் தொடரக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வெளியில், வீதிகளில் மற்றும் நெல் வயல்களில் வேலை செய்பவர்கள் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலைமைகளிலிருந்து பாதுகாக்க, சுகாதார அதிகாரிகள் மக்கள் அதிக தண்ணீர் குடிக்கவும், இயற்கை திரவங்களை அதிகமாக உட்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

You must be logged in to post a comment.