Local

அரசியல் தலைவர்கள் மக்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் பாப்பரசர் வேண்டுகோள்!

போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்படி ,மக்களுக்காக பிரார்த்தனை, சமாதானத்தை வேண்டுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் “மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு முழு மரியாதை அளித்து, மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று பொறுப்புகள் உள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading