Technology

ஆய்வகத்தில் உருவான இதயம், கல்லீரல்!

அமெரிக்​கா​வின் நார்த் டெக்​சாஸ் பல்​கலைக்​கழகம், ஸ்டான்​போர்ட் பல்​கலைக்​கழக விஞ்​ஞானிகள் இணைந்து இதயம், கல்​லீரல், இரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை ஆய்​வகத்​தில் செயற்கையாக உரு​வாக்கி சாதனை படைத்து உள்​ளனர்.

இதுதொடர்​பான ஆய்​வறிக்கை முன்​னணி மருத்​துவ இதழ்​களில் வெளி​யிடப்​பட்டுள்​ளது.

ஆய்​வகத்​தில் ஸ்டெம் செல்​களை பயன்​படுத்தி செயற்கை இதயத்தை உரு​வாக்​கும் ஆராய்ச்​சி​யில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஈடு​பட்டு வரு​வதாக அந்த ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்​படி 16 நாட்​களில் எங்​களது ஆய்​வகத்​தில் செயற்கை இதயம் உரு​வாக்​கப்​பட்​டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்​கிறது.

இதே​போல செயற்கை கல்​லீரலை​யும் உரு​வாக்கி உள்​ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்​களை​யும் உரு​வாக்கி இருக்​கிறோம்.

எங்​களது ஆராய்ச்​சி​யின் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​களை காப்​பாற்ற முடி​யும் என ஆய்​வறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதேநேரம் இந்த கண்டுபிடிப்புகள் ஆரம்பகால மனித வளர்ச்சி, நோய் முன்னேற்றம் மற்றும் மருந்து மறுமொழி ஆகியவற்றைப் படிப்பதற்கான மிகவும் துல்லியமான மாதிரிகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் மற்றும் பாதுகாப்பான, வேகமான மருந்து கண்டுபிடிப்புக்கான சாத்தியக்கூறுகள் இதில் குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும், தமனிகள் மற்றும் நரம்புகள் போன்ற பெரிய நாளங்கள் உட்பட மனித இரத்த நாளங்களின் சிக்கலான தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்க அதிக ஆராய்ச்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading