ஆய்வகத்தில் உருவான இதயம், கல்லீரல்!
அமெரிக்காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதயம், கல்லீரல், இரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர்.
இதுதொடர்பான ஆய்வறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 16 நாட்களில் எங்களது ஆய்வகத்தில் செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்கிறது.
இதேபோல செயற்கை கல்லீரலையும் உருவாக்கி உள்ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்களையும் உருவாக்கி இருக்கிறோம்.
எங்களது ஆராய்ச்சியின் மூலம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த கண்டுபிடிப்புகள் ஆரம்பகால மனித வளர்ச்சி, நோய் முன்னேற்றம் மற்றும் மருந்து மறுமொழி ஆகியவற்றைப் படிப்பதற்கான மிகவும் துல்லியமான மாதிரிகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் மற்றும் பாதுகாப்பான, வேகமான மருந்து கண்டுபிடிப்புக்கான சாத்தியக்கூறுகள் இதில் குறிப்பிடத்தக்கவை.
இருப்பினும், தமனிகள் மற்றும் நரம்புகள் போன்ற பெரிய நாளங்கள் உட்பட மனித இரத்த நாளங்களின் சிக்கலான தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்க அதிக ஆராய்ச்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

You must be logged in to post a comment.