Local

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்தால் இடப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் 5 வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 100ஐ கடந்துவிட்டது என்றும், மேலும் நோயாளர்கள் அதிகரித்தால் இடப்பற்றாக்குறை ஏற்படும் எனவும் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொழும்பு ஐ.டி.எச், வெளிகந்த, முல்லேரியா, இரணவில, காத்தான்குடி, ஹோமாகம, மினுவங்கொட, ஹம்பாந்தோட்டை மற்றும் தெல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading