Local

இலங்கை மக்களுக்கு பொய் கூறி ஏமாற்றி விட்டார் மஹிந்த!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) பதவி விலகுவதாக அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.

பின்னர், அவர் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்,  சபாநாயகர் இன்று  ஜனாதிபதியின் இராஜினாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்த  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், அரசியலமைப்பின் 37 – 1 ஆம் சரத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மாத்திரம் கூறினார்.

எனினும், ஜனாதிபதியின் இராஜினாமா, மற்றும்  இராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் வாய்திறக்கவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading