ஒரே அறிவிப்பால் ரூ 6 லட்சம் கோடியை இழந்த ஆப்பிள் நிறுவனம்
அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால், அவற்றுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஒரேயடியாக ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ட்ரம்ப் தமது பதிவில், அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ அல்ல, அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தெரிவித்திருந்தேன்.
பங்கின் விலை சரிவடைந்த நிலையில் இந்திய மதிப்பில் ரூ 6 லட்சம் கோடியை ஆப்பிள் நிறுவனம் ஒரேயடியாக இழந்துள்ளது.

ட்ரம்பின் இந்த கிடுக்குப்பிடியில் ஆப்பிள் மட்டும் சிக்கவில்லை. சாம்சங் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியே அலைபேசிகளை தயாரிக்கும் வேறு எந்த அலைபேசி உற்பத்தியாளருக்கும் 25 சதவீத வரி விதிக்கப்போவதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் ட்ரம்ப் கூறியுள்ளார்.

You must be logged in to post a comment.