Local

கொரோனாவை விட அரசாங்கமே மக்களிற்கு ஆபத்தானதாக மாறியுள்ளது!

அரசாங்கம் மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதை நிறுத்தி, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதையும் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தனது கட்டளையை இழந்துவிட்டது.
அவரது அறிக்கையில், அரிசி, கோதுமை மா, சீனி , பால்மா , சோயா பீன்ஸ் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் மொத்த விலைகள் 16% லிருந்து 32% ஆக உயர்ந்துள்ளது.

பால்மா , மா, சோயா, எண்ணெய் மற்றும் பிற தானியங்கள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மொத்த விலையும் அதிகரித்துள்ளது.

சந்தை மாஃபியா செயற்பட்டு வருவதாகவும், அரசாங்கம் எதுவும் செய்யாமல் செயற்பட அனுமதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு வருமானம் இல்லாத நேரத்தில் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் மக்கள் மீது அக்கறை காட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.

தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, தேவையற்ற பெரிய அளவிலான திட்டங்களில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை இப்போது மிகவும் தீர்க்கமான தருணத்தை எதிர்கொண்டுள்ளது, மக்கள் இப்போது கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதை விட அரசாங்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடத்தை மனிதாபிமானமற்றது மற்றும் மக்களுக்கு நட்பு அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading