Local

கொரோனா வைரஸ் பாதிப்பால் தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் எப்படி இருக்கும்?

கொரோனா வைரஸ் காரணமாக விரைவில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை ஏற்படுமென உலக வங்கி கணித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 25 சதவீத மக்கள் எட்டு நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய நாடுகளில் வசிக்கின்றனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிகிதம் இருக்குமென கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனாவுக்கு பிறகு 1.8 – 2.8 % என்ற அளவில்தான் இருக்குமென்கிறது உலக வங்கி.

குறிப்பாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியானது 1.5 – 2.8 % என்ற அளவில்தான் ஏப்ரல் மாதம் தொடங்கும் நிதியாண்டில் இருக்கும் என்கிறது உலக வங்கி.

நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் இருக்கும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகளில் பொருளாதார மந்தநிலை இருக்கும் என்கிறது உலக வங்கி.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading