Local

கொவிட் தொற்றால் தாயை ஏற்க மறுக்கும் மகள்!

மினுவாங்கொடையில் கோவிட் தொற்றுக்குள்ளான தாயொருவரை வைத்தியசாலை சிகிச்சைக்கு பின்னர் பொறுப்பேற்க மகள் மறுத்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கம்பஹா மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்று காரணமாக தன்னை மினுவாங்கொட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், தான் தற்போது குணமடைந்து வருவதால் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மகள் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

” தங்க மகளே என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றும் குறித்த தாய் கண்ணீர் மல்க கதறும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தலவத்துகொடவில் வசிக்கும் 55 வயதான தம்மிகா ஜெயவீரா எனும் தாயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்,தனது மகளின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தினாலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading